Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 1, Verse 15

பா1ஞ்ச1ஜன்யம் ஹ்ருஷீகே1ஶோ தே3வத3த்11ம் த4னந்ஜய: |

பௌ1ண்ட்3ரம் த3த்4மௌ  மஹாஶங்க2ம் பீ4மக1ர்மா வ்ருகோ13ர: ||15||

பாஞ்சஜன்யம்----பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் ஶங்கு; ஹ்ருஷிகேஶஹ--ஸ்ரீ கிருஷ்ணர், மனங்களின்  மற்றும் புலன்களின் ஏகாதிபதி; தேவதத்தம்-—தேவதத்தம் என்று அழைக்கப்படும் ஶங்கு; தனஞ்ஜயஹ----செல்வத்தை வென்ற அர்ஜுனன்; பௌண்ட்ரம்--—பௌண்ட்ரம் என்று அழைக்கப்படும் ஶங்கு; தத்மௌ--—முழங்கினர்; மஹாஶங்கம்----பெரிய ஶங்கு; பீமகர்மா---அதிக சக்திவாய்ந்த கடினமான பணிகளைச் செய்பவர்; வ்ருக-உதரஹ----பீமன் பெருந்தீனி தின்கிற.

Translation

BG 1.15: ஹ்ருஷிகேஶ் தனது பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் சங்கை முழங்கினார், மற்றும் அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கை முழங்கினார். தீராப் பெரும்பசியுடைய, அதிக சக்திவாய்ந்த  பணிகளைச் செய்வவருமான பீமன்,  பௌண்ட்ரம் என்று அழைக்கப்படும் அவரது வலிமையான சங்கை முழங்கினார்.

Commentary

‘ஹ்ருஷிகேஶ்' என்ற சொல்லுக்கு மனம் மற்றும் புலன்களின் இறைவன் என்று பொருள். இது ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பயன்படுத்தப்பட்டது. அதாவது மனம் மற்றும் புலன்களின் இறைவன். ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருடைய  மனங்களின்  மற்றும் புலன்களின் (அவரது புலன்கள் உட்பட) ஏகாதிபதி. மேலும்  அவர் தனது தெய்வீக பொழுதுபோக்குகள் அனைத்திலும் தனது மனதின் மற்றும் புலன்களின் முழுமையான  கட்டுப்பாட்டை  பிரதிபலித்தார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
1. அர்ஜுன விஷாத யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!